திருவள்ளூர் அருகே ராக்கெட் லாசர் குண்டை 3வது நாளாக போலீசார் பாதுகாத்து வரும் சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆவாஜபேட்டை பகுதியில் குப்பன் என்பவர் தனது மாட்டு கொட்டகையில் பள்ளம் தோண்டிய போது இரண்டாம் உலகப்போரின் போது ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய ராக்கெட் லாஞ்சர் குண்டை கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் அந்த வெடிகுண்டை மீட்டு ஆய்வுக்காக அருகேயுள்ள விளையாட்டு மைதானத்தில் மணல் மூட்டைகளை அடுக்கு பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
கடும் குளிர்காலத்திலும் இரவு, பகல் பாராமல் அந்த குண்டை போலீசார் தொடர்ந்து 3வது நாளாக காவல் காத்து வருகின்றனர். ஒரு ஆய்வாளர் உட்பட 7 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் உள்ள மருதம் வெடிகுண்டு நிபுணர் குழு பாபர் மசூதி இடிப்பு தினம் மற்றும் திருவண்ணாமலை தீபத் திருவிழா நடைபெறும் இடங்களில் ஆய்வு பணியில் இருப்பதால் அவர்கள் வருவதற்கு தாமதம் ஆகுவதாகவும், அதனால் தான் தொடர்ந்து 3 நாட்களாக குண்டை பாதுகாத்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
இருப்பினும், இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ராக்கெட் லாஞ்சர் வெடிகுண்டை விரைவாக ஆய்வு செய்து அப்புறப்படுத்தாமல் குடியிருப்பு பகுதிக்கு அருகே வைத்திருப்பது அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…