Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விடுமுறைக்கு வந்த ராணுவ வீரர் பலி...முயல் வேட்டைக்கு சென்றபோது பரிதாபம்...!

madhankumar July 31, 2022 & 12:11 [IST]
விடுமுறைக்கு வந்த ராணுவ வீரர் பலி...முயல் வேட்டைக்கு சென்றபோது பரிதாபம்...!Representative Image.

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே காட்டுப்பகுதியில் முயல் வேட்டைக்குச் சென்ற தந்தை-மகன் உட்பட 3 பேர் மின்சார வேலியில் சிக்கி பலியாகினர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள முகவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார் என்ற அய்ங்காளை(52) விவசாயியான இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன்  அஜித்(25) இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். இரண்டாவது மகன் சுகந்திரபாண்டி(23). 

இவர்கள் மூன்று பெரும் நேற்று இரவு சிவகங்கை மாவட்ட எல்லை அருகே உள்ள மாரநாடு வயல்வெளி பகுதியில் முயல் வேட்டைக்கு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பன்றிக்கு வைத்திருந்த மின்சார வயரை மிதித்தனர், இதனால் தூக்கி வீசப்பட்ட மூவரும் உயிரிழந்தனர். காட்டுப்பகுதியில் மூவர் உயிரிழந்ததை பார்த்த சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை கைப்பற்று விசாரணை  நடத்தினர்.அப்போது உயிரிழந்தவர்களில் ராணுவ வீரரான அஜித் திருமணமானவர் எனத்தெரிய வருகிறது. கடந்த 15 நாள்களுக்கு முன்னர்தான் அஜித்துக்கு குழந்தை பிறந்திருக்கிறது. அச்சமயம் அஜித், ராணுவத்தில் பயிற்சியில் இருந்ததால் குழந்தையைப் பார்க்கவேண்டும் என்பதற்காக லீவு எடுத்துக்கொண்டு சொந்த ஊர் வந்துள்ளார். விடுமுறை முடிந்து மீண்டும் பணியில் சேர இருந்த நிலையில் அவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்