Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

துணை முதல்வரை தூக்க ஸ்கெட்ச்..? அலறும் அரவிந்த் கெஜ்ரிவால். பரபர டெல்லி அரசியல்!!

Sekar July 22, 2022 & 16:26 [IST]
துணை முதல்வரை தூக்க ஸ்கெட்ச்..? அலறும் அரவிந்த் கெஜ்ரிவால். பரபர டெல்லி அரசியல்!!Representative Image.

மத்திய அரசு மற்றும் துணை நிலை ஆளுநர் பழிவாங்கும் அரசியலை மேற்கொள்கிறார்கள் என்று குற்றம் சாட்டிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி தேசிய அளவில் பாஜகவுக்கு மாற்றாக எழுச்சி பெறுவதை அவர்களால் தடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். 

முன்னதாக டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா, துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நேரடியாக தொடர்புடையதாகக் கூறப்படும் டெல்லி அரசாங்கத்தின் கலால் கொள்கை மீது சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்த சில மணிநேரங்களுக்குப் பிறகு அரவிந்த் கெஜ்ரிவால் இதைத் தெரிவித்துள்ளார்.

துணை நிலை ஆளுநருக்கு முழு ஆதரவை வெளிப்படுத்திய கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா நேர்மையானவர் என்றார். 

இது தொடர்பாக மேலும் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், "இந்த முழு வழக்கும் பொய்யானது. கடந்த 22 ஆண்டுகளாக சிசோடியாவை எனக்குத் தெரியும். அவர் நேர்மையானவர். அவர் அமைச்சரானபோது டெல்லி அரசுப் பள்ளிகள் மோசமான நிலையில் இருந்தன. அவற்றை உயரிய நிலைக்குக் கொண்டு வர இரவு பகலாக உழைத்தார். இன்று பணக்காரரின் குழந்தையும் ரிக்ஷா ஓட்டுனரின் குழந்தையும் ஒன்றாக அமர்ந்து படிக்கின்றனர். 

மணீஷ் சிசோடியா விரைவில் கைது செய்யப்படுவார் என்று எனக்குத் தெரியும். இந்த மாதத்திற்கு முன்பே எனக்குத் தெரியும். நாட்டில் இப்போது ஒரு புதிய அமைப்பு உள்ளது, அவர்கள் முடிவு செய்கிறார்கள் யாரை சிறைக்கு அனுப்புவது என்று. பின்னர் அவர்களால் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது.

நாங்கள் சிறைகளுக்கு பயப்படவில்லை, கயிற்றைக் கண்டு பயப்படவில்லை. அவர்கள் எங்கள் கட்சியினர் மீது பல வழக்குகளைத் தொடுத்துள்ளனர். ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் வெற்றி பெற்றதில் இருந்து வளர்ந்து வருகிறது. அவர்களால் எங்களை தேசிய அளவில் வளர்வதை பார்க்க முடியவில்லை. அதனால் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். ஆனால் எதுவும் எங்களைத் தடுக்காது." என்றார்.

இதற்கிடையே துணை நிலை ஆளுநரின் பரிந்துரை குறித்து மணீஷ் சிசோடியா வெளியிட்டுள்ள ட்வீட்டில், "மோடிஜி கெஜ்ரிவால்ஜிக்கு மிகவும் பயப்படுகிறார். மக்கள் மோடிஜி மீது ஏமாற்றமடைந்துள்ளனர். இப்போது நாடு கெஜ்ரிவால் ஜி மீது மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளது. நாடு முழுவதும் ஆம் ஆத்மியின் செல்வாக்கு அதிகரித்து வருவதால், மேலும் பல பொய் வழக்குகள் பாயும். 

ஆனால் இப்போது எந்த சிறையும் கெஜ்ரிவால் ஜி மற்றும் ஆம் ஆத்மியை தடுக்க முடியாது. எதிர்காலம் நமக்கு சொந்தமானது, எதிர்காலம் இந்தியாவிற்கு சொந்தமானது." என்று குறிப்பிட்டுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்