கடலோரப் பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.
சமீபத்தில் வங்க கடலில் 'மாண்டஸ்' புயல் உருவாகி, சென்னை அருகே, கரையை கடந்தது.இதன் காரணமாக, மீனவர்களின் பாதுகாப்பு கருதி, டிச. , 6 முதல், அவர்களை கடலுக்கு செல்ல வேண்டாமென, மீன்வளத் துறை அறிவுறுத்தியிருந்தது. புயல் காரணமாக 7 நாட்களுக்கும் மேலாக கடலுக்குச் செல்லாமல் இருந்த மீனவர்கள் கடந்த வாரம் மீண்டும் மீன்பிடிக்கச் செல்லத் தொடங்கினர்.
இந்நிலையில் தென் தமிழக கடலோர பகுதிகளில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது.
இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த 1500 க்கு ம் மேற்பட்ட விசைப்படகுகள் 3000 மேற்பட்ட நாட்டு படகுகள் இன்று மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.
இதன் காரணமாக 20,000 மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்துள்ளனர்.
மேலும் ராமநாதபுரம் மாவட்டம் கடலோர பகுதியில் மணிக்கு20 முதல் 25 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருவதால் மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…