தெற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் இருந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, மேற்கு திசையில் நகர்ந்து தற்போது தெற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் 20 மற்றும் 21ஆம் தேதிகளில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நாளை தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என தெரிவித்துளளது.
அதே போல் வரும் 21 ஆம் தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலுார், அரியலுார், கடலுார், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…