அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியின் போராகான் பகுதியில் பெய்த கனமழைக்கு இடையே ஏற்பட்ட நிலச்சரிவில் நான்கு பேர் உயிரோடு மண்ணில் புதைந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காமாக்யா, கர்குலி, ஹெங்கராபரி, சில்புகுரி மற்றும் சந்த்மாரி காலனி உள்ளிட்ட நகரத்தின் அரை டஜன் இடங்களில் நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன. இதில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த ஆண்டு வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் மழையால், நகரின் அனைத்து முக்கிய சாலைகளிலும் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியது. சில இடங்களில் நீர் மட்டம் இடுப்பளவைத் தாண்டியுள்ளது. கவுகாத்தி ரயில் நிலையத்தின் அணுகு சாலையும் நீரில் மூழ்கியது.
ஸ்மார்ட் சிட்டியில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீரில் இன்ஜின்கள் பழுதடைந்ததால், பள்ளி வாகனங்கள் உட்பட நூற்றுக்கணக்கான வாகனங்கள் சாலைகளில் சிக்கித் தவித்தன. பல பகுதிகளில் பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல மணிநேரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டன.
இதற்கிடையில், ஜூன் 13 முதல் 17 வரை வடகிழக்கு மாநிலங்களில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…