UP Trending News : உத்திரபிரதேசத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் திடீரென மணமகனின் விக் கழன்றதால் மணப்பெண் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவ் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில், திருமணத்துக்கு முந்தையநாள் மாலை அனைத்து சடங்குகளும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில், அடுத்த நாள் காலை திருமண நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், மணமகன் திடீரென மயங்கி கீழே விழுந்தார். அப்போது, அவர் தலையில் உள்ள வழுக்கையை மறைத்து தலையில் இருந்த 'விக்' எதிர்பாராவிதமாக கழன்று விழுந்தது.
திருமணத்தை நிறுத்திய மணமகள்
இந்நிலையில், இச்சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்த மணமகள் அவரைத் திருமணம் செய்துகொள்ள மறுத்து திருமணத்தை நிறுத்தி விட்டார். இதனையடுத்து மணமகளை அவருடைய குடும்பத்தினர் சமாதானப்படுத்தினர். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத மணமகள் திருமணம் செய்ய ஒத்துக்கொள்ள வில்லை.
புகார்
இது குறித்து மணமகள் வீட்டார் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதில், ”இந்த திருமணத்திற்காக 5.66 லட்சம் செலவு செய்திருப்பதாகவும், அதனை மணமகன் வீட்டார் திருப்பித் தர வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர். இதனை மணமகன் வீட்டார் ஏற்றுக்கொண்டதால் இந்தப் பிரச்சினை வழக்குபதிவு செய்யாமல் முடித்துவைக்கப்பட்டது.
இதுகுறித்து மணமகளின் மாமா, ”மணமகனின் தலையில் உள்ள வழுக்கையை முன்பே தெரிவித்திருந்தால் மனதளவில் தங்களது பெண்ணை தயார் செய்திருப்போம். ஆனால் அவர்கள் மறைத்தது அவர்கள் மீதான நம்பிக்கையை இழக்க வைத்துவிட்டது” என கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…