பெங்களூரில் கல்லூரி மாணவிகள் இருவர் இலவசமாக கட்டிபிடி வைத்தியம் நடத்தி கவனத்தை ஈர்த்துள்ளனர்.
பெங்களூருவை சேர்ந்த அபூர்வ அகர்வால் (19) மற்றும் தனிஷா பரஸ்ராம்கா (22) ஆகிய இருவரும் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், அவர்கள் இருவரும் கைகளில் "Free Hugs" என்ற பதாகையை ஏந்திக் கொண்டு தெருவில் நின்று, போவோர் வருவோரை கட்டிப்பிடித்தனர். அதன்படி சுமார் ஒரு மணி நேரத்தில், ஆண், பெண் என மொத்தமாக 100 பேரை கட்டிப்பிடித்துள்ளனர்.
எதற்காக இதை செய்தீர்கள் எனக் கேட்டபோது, சமூக வலைதளங்களில் இதுபோன்ற ஒரு வீடியோவை பார்த்து ஆர்வமடைந்து, அதை செய்ததாக கூறியுள்ளனர்.
கட்டிப்பிடி வைத்தியம் செய்தால் மன அழுத்தம் குறையும் என சொல்லப்படும் நிலையில், இன்றைய பரபரப்பான உலகில், அவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு நூதன முயற்சியாக இதை செய்ததாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதை பார்த்த நெட்டிசன்கள், நம்ம கமல் நடித்த வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்த பாத்து தான் இதை பண்ணிருப்பாங்களோ என பங்கம் பண்ணி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…