Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிபர்ஜாய் புயல் தாக்கம்: இருளில் மூழ்கிய கிராமங்கள்..!

Baskaran Updated:
பிபர்ஜாய் புயல் தாக்கம்: இருளில் மூழ்கிய கிராமங்கள்..!Representative Image.

காந்திநகர்: பிபர்ஜாய் புயல் தாக்கிய கட்ச் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மின்சார வசதியின்றி இருளில் மூழ்கின.

அரபிக்கடலில் உருவாக காற்றுத்தழுத்த தாழ்வுப் பகுதி அதி தீவிர புயலாக மாறியது. இந்த புயலுக்கு பிபர்ஜாய் எனப் பெயரிடப்பட்டிருந்தது. கடந்த 4நாட்களாக குஜராத் மாநிலத்தை அச்சுறுத்தி வந்த இந்த புயல் கட்ச் பகுதியில் நேற்று மாலை கரையை கடக்க தொடங்கிய புயல் இன்று அதிகாலை வரை நீடித்தது. மணிக்கு சுமார் 60-80 கிலோ மீட்டர் வேகத்திற்கு கரையை கடந்ததால் சுற்றுவட்டாரத்திலிருந்த 1லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த புயல் அடித்து ஓய்ந்துள்ள நிலையில் கட்ச் பகுதியை ஒட்டியுள்ள சுமார் 1000-த்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் முழ்கியுள்ளது. சுமார் 500மின்கம்பங்கள் புயலால் சேதமடைந்துள்ளது. உயிர்சேதம் குறித்து எந்தவித தகவலும் வரவில்லை. மக்கள் அனைவரும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாய்ந்த மின்கம்பங்களை சரிசெய்யும் பணிகளில் மின்வாரிய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்