பீகாரில் முதிய ஆசிரியர் ஒருவரை இரண்டு பெண் போலீஸ் அதிகாரிகள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தின் கைமூரில் இருந்து வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் வீடியோவில், இரண்டு பெண் பீகார் போலீஸ் அதிகாரிகள் வயதான பள்ளி ஆசிரியரை அடிப்பதைக் காணலாம். ஆச்சர்யம் என்னவெனில், சாலை நெரிசல் அதிகமாக இருந்தும், மக்கள் கடந்து சென்றாலும், காவல்துறையின் தாக்குதலை தடுக்கவோ, முதியவருக்கு உதவவோ யாரும் தலையிடவில்லை.
இந்த இரண்டு பெண் அதிகாரிகளால் தாக்கப்பட்ட முதியவரின் பெயர் பாண்டே ஜி மற்றும் பல ஆண்டுகளாக கைமூரில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியராக உள்ளார்.
இந்நிலையில், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவை டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் ட்வீட் செய்துள்ளார். இதில் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…