சென்னை: தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் திமுக மேடை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தன்னை அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டியை தொடர்ந்து, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். இதை தொடர்ந்து காவல்துறையினர் தாமாக முன்வந்து கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து தற்போது நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இடுப்பு எலும்பு பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், விரைவில் வீடு திரும்புவேன் என்றும் பதிவிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…