பாட்னா: ஆலோசனைக் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை ஒற்றுமையாக எதிர்கொள்வது குறித்து ஆலோசித்தோம் என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் எதிர்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் 16கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்துக் கொண்டனர். இதில் மல்லிகார்ஜூனே கார்கே, ராகுல் காந்தி மற்றும் திமுக தலைவரும், முதல்வருமான மு.க ஸ்டாலின், எம்பி டி.ஆர் பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக வெற்றிப் பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் உள்ளதால், பாஜகவை வீழ்த்த எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து இந்த கூட்டத்தில் பங்கேற்றன. பிற்பகல் 12மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் மாலை 4மணி வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜகவை வீழ்த்த பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. மேலும் அடுத்த கூட்டம் சிம்லாவில், காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் கூட்டத்தை முடித்துக் கொண்டு செய்தியாளர்களை சந்தித்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், 2024 நாடாளுமன்ற தேர்தலை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள உள்ளதாக, பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும், கூட்டம் சிறப்பாகவும், ஒற்றுமையாகவும் நடைபெற்றது என்றும் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றும், கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…