சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த பிரியாணி கடை உரிமையாளரான நாகூர்கனி என்பவரை வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் அயனாவரம் மார்க்கெட் பகுதியில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரியாணி கடை வைத்து நடத்தி வருபவர் நாகூர்கனி. இவர், வழக்கம் போல, கடையில் இருந்த சமயத்தில் அங்கு 3 இருசக்கர வாகனங்களில் 5 பேர் கொண்ட கும்பல் இறங்கியது. இதில் அவர்கள் பயங்கர வாத ஆயுதங்களுடன் வந்ததைப் பார்த்ததும், நாகூர்கனி அதிர்ச்சியடைந்தார். இந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க முயற்சித்த சமயத்தில், நாகூர்கனியை அந்த கும்ப சுற்றி நின்று சரமாரியாக வெட்டியது.
சென்னையில் மக்கள் அதிகம் நடமாடும் பகுதியான அயனாவரத்தில் பொது மக்கள் மத்தியிலேயே சரமாரியாக வெட்டப்பட்ட நாகூர்கனி ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அலறியடித்துக் கொண்டு ஓடினர். பின்னர், அந்த கும்பல், அவர்கள் வந்த இருசக்கர வாகனத்திலேயே தப்பி சென்றது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த நாகூர்கனியின் உடலைப் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். இதில் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாவது, முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…