தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பாஜக தலைவர் ஞானேந்திரன் பிரசாத் என்பவர் தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும், இவர் தெலுங்கானா மாநிலத்தின் முக்கிய பாஜக நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மின்விசிறியில் இருந்த அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, பாஜக முக்கிய நிர்வாகியின் தற்கொலைக்கான காரணங்கள் குறித்து இதுவரை தெரியவில்லை எனவும் அவர் கைப்பட எழுதி வைத்த கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என்வும் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், இச்சம்பவம் குறித்த முதல் கட்ட விசாரணையில் கடந்த சில நாட்களாக அவர் மன உளைச்சலுடன் இருந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…