பாஜக மாநில தலைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
தெலங்கானவின் டிஆர்.எஸ் கட்சியின் சந்திரசேகர்ராவ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தெலங்கானவில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வரவுள்ளதால், பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அதன்படி தெலங்கானவில் காங்கிரஸ் பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகிறது.
தெலங்கானவில் பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், தெலங்கானா, பாஜக தலைவர் ஞானேந்திர பிரசாத் தற்கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தற்கொலை செய்ததை உறுதிப்படுத்திய போலீசார், தொடர்ந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…