கர்நாடகா பாஜக யுவமோர்ச்சா உறுப்பினர் பிரவீன் நெட்டாருவின் மரணத்தால் பாரதிய ஜனதா கட்சி மீது அதன் ஒரு அணியான யுவமோர்ச்சா கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தட்சிண கன்னடா எம்பி நளின்குமார் கட்டீலுக்கு சொந்தமான காரை கட்சியின் யுவமோர்ச்சா தொண்டர்கள் தள்ளுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#WATCH | Protestors express their anger over the murder of BJP Yuva Morcha worker Praveen Nettaru in Bellare, Dakshina Kannada.
— ANI (@ANI) July 27, 2022
The car being jolted by protesters reportedly belongs to Dakshina Kannada MP Nalinkumar Kateel#Karnataka pic.twitter.com/J4HyBZr0br
பாஜக தொண்டர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, தக்ஷிண கன்னடா மாவட்டத்தில் இன்று பல இடங்களில் கல் வீச்சு மற்றும் போலீஸ் தடியடி நடத்தப்பட்ட நிகழ்வுகளால் பதற்றம் நிலவியது.
இந்த கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தூர், கடபா, சுல்லியா தாலுகாவில் பந்த் நடத்த சங்பரிவார் அழைப்பு விடுத்துள்ளது.
முன்னதாக, ஜில்லா பாஜக யுவ மோர்ச்சா கமிட்டி உறுப்பினர் பிரவீன் நெட்டாரு நேற்று இரவு பெல்லாரேயில் உள்ள அவரது பிராய்லர் கடைக்கு முன்பாக பைக்கில் வந்த மூன்று மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள பெல்லாரேவில் உள்ள நெட்டாரு பகுதியைச் சேர்ந்த இவர், கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் சம்பவத்தை கண்ட உள்ளூர்வாசிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நெட்டாரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து சில இடங்களில் அரசு பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. புத்தூரில் இருந்து மங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து, போல்வார் என்ற இடத்தில் கல் வீச்சு சம்பவத்தில் சேதமடைந்தது.
இதற்கிடையில், இறந்த பாஜக பிரமுகரின் உடலை சங்க அமைப்புகளின் தொண்டர்கள் நெட்டாறுக்கு ஆம்புலன்ஸில் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
இளைஞரணித் தலைவரின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான நெட்டாறுவில் நடைபெறவுள்ளன. இதையடுத்து பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளம் ஆர்வலர்கள் பெல்லாரேயில் கூடி எங்களுக்கு நீதி வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர்.
கல்வீச்சு சம்பவங்களைத் தொடர்ந்து கட்டுக்கடங்காத போராட்டக்காரர்கள் மீது போலீசார் லத்தி சார்ஜ் செய்ய வேண்டியிருந்தது.
தட்சிண கன்னடா மாவட்ட பொறுப்பாளர் சுனில் குமார், மாநில பாஜக தலைவர் சுனில் குமார், ஆர்எஸ்எஸ் தலைவர் கல்லாட்கா பிரபாகர் பட் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இக்கொலை சம்பவத்தையடுத்து, மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகளை பிடிக்க போலீசார் நான்கு தனிப்படைகளை அமைத்துள்ளனர்.
சமீபத்தில் அதே பகுதியில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைக் கொன்றதற்குப் பழிவாங்கும் வகையில் இந்தக் கொலை நடந்துள்ளதாக வலதுசாரி அமைப்புகளால் சந்தேகம் எழுப்பப்படுவதால், இந்த சம்பவம் வகுப்புவாத ரீதியில் திரும்பும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
பெல்லாரே காவல்நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸார், 4 தனிப்படை அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொலையாளிகளைப் பிடிக்க முயற்சித்து வருகின்றனர். போலீஸ் நிலையத்தில் சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இக்கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் பசவராஜ் பொம்மை, கொடூரமான செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்தார்.
"தட்சிண கன்னடாவில் உள்ள சுல்லியாவைச் சேர்ந்த எங்கள் கட்சித் தொண்டர் பிரவீன் நெட்டரின் கொடூரமான படுகொலை கண்டிக்கத்தக்கது. இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள்" என்று பொம்மை ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொம்மை, கேரள எல்லைக்கு அருகில் இந்த சம்பவம் நடந்ததால், அங்குள்ள போலீஸ்காரருடன் கர்நாடக போலீசார் தொடர்பில் உள்ளனர். "மங்களூரு காவல் கண்காணிப்பாளர், காசர்கோட்டில் உள்ள காவல் கண்காணிப்பாளருடன் தொடர்பில் இருக்கிறார். மேலும் மாநில டிஜிபி கேரளா டிஜிபியிடம் பேசியுள்ளார். விரைவில் அவர்களைப் பிடிப்போம், இதை நாங்கள் தீவிரமாக எடுத்துள்ளோம்." என்று அவர் கூறினார்.
ஆரம்பத்தில் இது முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக தோன்றுகிறது மற்றும் மற்ற வழக்குகளுடன் ஒற்றுமைகள் உள்ளன, அவை முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன என முதல்வர் மேலும் கூறினார்.
28 வயதான பஜ்ரங் தள் செயற்பாட்டாளர் ஒரு கும்பலால் ஷிவமொகாவில் படுகொலை செய்யப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து முதலமைச்சரிடம் பேசியுள்ளதாகவும், காவல்துறைக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் உள்துறை அமைச்சர் அர்க ஞானேந்திரா தெரிவித்தார்.
மூத்த ஏடிஜிபி அந்தஸ்துள்ள அதிகாரி மங்களூருக்குச் சென்று விசாரணையைக் கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பார். குற்றவாளிகளை பிடிப்பதுடன், அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அவர் மேலும் கூறினார்.
"ஒரு இளைஞனை இழந்தால் கோபம் வருவது இயற்கையானது, ஆனால் நான் மக்களை அமைதி காக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்." என வலியுறுத்தியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…