ஆலங்குளம் அருகே பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்த தமிழ் ஆசிரியர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்த விரிவான செய்தி.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வெங்கடேஷ்வரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரைலிங்கம் (43). இவர் அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெரும் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். வகுப்பு நேரத்தில் மாணவன் ஒருவனை பாலியல் ரீதியாக சக மாணவர்கள் முன்னிலையில் கேலி செய்துள்ளார். அதில் மிகவும் வேதனையடைந்த மாணவன் அன்று முதல் பள்ளிக்கு செல்வதை தவிர்த்து விட்டார்.
நீண்ட நாள் ஆகியும் பள்ளிக்கு போகாததால் ஏன் செல்லவில்லை என்று பெற்றோர்கள் கேட்கும் போது தனக்கு நடந்ததை தெரிவித்தான் அந்த மாணவன். மிகவும் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் ஆலங்குளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல் துறையினர் அட்னஹ் தமிழ் ஆசிரியர் மீதான குற்றம் நிரூபணமானதால் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை ஆலங்குளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…