மத்திய பிரதேசம் மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில் மரத்தில் தூக்கில் தொங்கியபடி 3 சகோதரிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஜாவர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்கேடி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் சோனு, சாவித்திரி மற்றும் லலிதா என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் தங்களது தாய் மற்றும் சகோதரருடன் வசித்துவந்துள்ளனர். இந்த நிலையில் மூவரும் மரத்தில் தூக்கில் தொங்கியபடி கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக் கடிதம் எதுவும் கிடைக்காததால் இறப்புக்கான காரணம் குறித்து தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…