North Korea : வடகொரியாவில் இந்த ஆண்டு தொடக்கம் முதலே ஏவுகணை சோதனை நடத்தி வருகின்றனர். இதற்க்கு தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனால், இதை வடகொரியா கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் வடகொரியா ஒரே நாளில் 8 ஏவுகணை சோதனை செய்துள்ளது. மேலும், தென்கொரியா எல்லை பகுதியில் பீரங்கி குண்டுகளை கடலில் வீசி வடகொரியா சோதனை நடத்தியதாக தென்கொரியா புகார் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தென்கொரியா ராணுவம், “எல்லையில் பீரங்கி குண்டுகள் வெடிக்கும் சத்தம் தொடர்ந்து கேட்டது. இது சில மணி நேரங்கள் நீடித்தது” என தெரிவித்துள்ளது.
மேலும், வடகொரியாவின் எல்லையில் இருந்து சுமார் 40 முதல் 50 கி.மீ. தொலைவில் உள்ள தென்கொரியாவின் நகர் பகுதியில் பீரங்கி குண்டு சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…