அமெரிக்காவில் அனக்னீஸ்டா என்ற பூங்காவில் இருந்த ரோப் காரில் 40 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று அதிலிருந்து இளம் பெண் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அமெரிக்காவின் டென்னிசி மாகாணம் ஹட்லிங்பெர்க் நகரில் அனக்னீஸ்டா என்ற இடத்தில் என்ற பொழுதுபோக்கு பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த பூங்காவின் சிறப்பம்சமாக ரோப் கார் வசதி செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் ரோப் காரில் ஏறி இயற்கை எழிலை சுற்றிப் பார்ப்பது வழக்கம்.
இந்நிலையில் அந்த ரோப்காரில் பெண் ஒருவர் மட்டும் தனியாக பயணித்துள்ளார், அப்போது 40 அடி உயரத்தில் ரோப் கார் சென்று கொண்டிருந்தது. திடீரென்று அந்த இளம்பெண் ரோப் காரில் பிரத்யேகமாக போடப்பட்டு இருந்த பாதுகாப்பு கம்பிகளை அகற்றிவிட்டு கீழே குதித்தார். படுகாயமடைந்த அந்தப்பெண் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து பூங்கா காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த போலீசார், இளம் பெண்ணின் உடலை மீட்டனர். தற்கொலை செய்து கொண்ட இளம் பெண் யார்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…