ஹாசன் மாவட்டம் தொட்டநாகரா கிராமத்தை சேர்ந்தவர ஆஷா. இவருக்கும் பிளிசாரே கிராமத்திய சேர்ந்த சதீஸ் என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து சுப்ரீத் (வயது 7) என்ற மகன் இருக்கிறான். கடந்த 3 ஆண்டுகளாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்த அவர்கள், பின்னர் குடும்ப பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். இதையடுத்து ஆஷா, தனது தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஆஷாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த உமேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, 3 மாதத்திற்கு முன்பு 2 பேரும் திருமணம் செய்துக் கொண்டனர்.
திருமணம் முடிந்த கையோடு நல்ல படியாக வாழ்ந்துக் கொண்டிருந்தனர். சுப்ரீத் அதேப் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளான். இந்நிலையில், நேற்று உமேஷ் சிறுவன் சுப்ரீத்திற்கு வீட்டுப்பாடம் சொல்லி கொடுத்து கொண்டிருந்தார். அப்போது, சுப்ரீத் உமேஷ் கூறியப்படி சரியாக வீட்டுபாடம் எழுதவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆத்திரத்தில் சிறுவனை கீழே தள்ளி அடித்து உதைத்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அச்சிறுவன் உயிருக்கு போராட, மகனின் சத்தம் கேட்டு அலறி அடித்து ஓடி வந்த ஆஷா உடனே மகனை உடனே அருகில் இருக்கும் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
சிறுவனுக்கு முதலுதவி அளித்த டாக்டர்கள் உடனே மேல் சிகிச்சைக்காக பெங்களூருவிற்கு கொண்டு செல்லும்படி கூறியிருக்கிறார். இதனால், அவசர அவசரமாக பெங்களூருவிற்கு கொண்டு செல்ல முயன்றுள்ளனர். ஆனால், அதற்கு முன்னரே உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அப்பாவி சிறுவன் இறந்துவிட்டான். இச்சம்பவம் அறிந்து விரைந்து வந்த ஹாசன் டவுன் போலீசார் சிறுவனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு உமேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…