Crime : ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவை சேர்ந்த சிறுமி கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போனதாக புகார் வந்துள்ளது. இந்நிலையில், அச்சிறுமியின் உடல் சிதைந்த நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் அப்பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பாக கேசர் சிங் கூறுகையில், “நீட் தேர்விற்காக கோட்டாவில் தங்கி படிக்கும்17 வயது சிறுமி கடந்த 4 ஆண்டுகளாக சமூக வலைதளத்தில் கிஷன் தாக்கூர் என்ற இளைஞருடன் நட்பாக பலகி வந்துள்ளார். சிறிது நாட்களில் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது. ஆனால் அந்த சிறுமி மேலும் காதலை தொடர விரும்பாததால் கிஷன் தாக்கூருடன் இருந்த உறவை முறித்துக் கொண்டுள்ளார்.
இதனால் கோபமடைந்த கிஷன் தாக்கூர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சிறுமி வசிக்கும் கோட்டாவிற்க்கு சென்று அவரை சந்தித்துள்ளார்.
இதனையடுத்து, கிஷன் தாக்கூர், அச்சிறுமியை தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் ஜவஹர் சாகர் அணைக்கு அருகிலுள்ள காட்டுக்குள் அச்சிறுமியை அழைத்துச் சென்று கல்லால் அடித்துக் கொலை செய்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.
மேலும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றத்திற்காக கிஷன் தாக்கூர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…