இந்த உலகில் எத்தனையோ ஆச்சரியங்களும் அதிசங்களும் அவ்வப்போது அறக்கேறிக் கொண்டி தான் இருக்கிறது. அந்தவகையில், ஒரு குழந்தை வயிற்றில் இன்னொரு குழந்தை உற்பத்தியாவது, மூன்று கால் மற்றும் நான்கு கைகளை கொண்டு குழந்தை பிறப்பது, உடல், தலை ஒட்டிப்பிறப்பது என பலவிதமான ஆச்சரியமான சம்பவங்களும் நடந்திருக்கின்றன. ஆனால், ஒரே வயிற்றில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு இருவேறு தந்தை இருப்பது மருத்துவ பரிசோதனையின் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது பிரேசில் நாட்டில் அரங்கேறியுள்ளது.
கோயாஸில் உள்ள மினெரியோஸைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் 11/2 வருடங்களுக்கு முன்பு இரட்டைக் குழந்தைகளை பெற்றிடுத்திருக்கிறார். ஆனால், அந்த பெண் ஒரே நாளில் இருவேறு ஆண்களுடன் உடலுறவு கொண்டிருந்ததால், இரட்டைக் குழந்தைகளின் தந்தை யார் என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. அதனால், சந்தேகத்தை உறுதிப்படுத்திக்கொள்ள மரபணு சோதனை ஒன்றை செய்துள்ளார்.
அந்தவகையில், டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பார்த்ததில் ஒரு குழந்தைக்கு மட்டும் பாசிட்டிவ் என பரிசோதனை முடிவு வந்ததைக் கண்டு அந்த பெண்ணோடு சேர்த்து மருத்துவர்களும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஆனால், மருத்துவர்களோ இதை அரியவகை கருத்தரிப்பாக இருக்கிறது என்று வியந்துப்போயிருக்கிறார்கள். இதனால், குழம்பி போன மருத்துவர்கள், அந்த பெண்ணிடம் கேட்க அவர் உண்மையை கூறியுள்ளார்.
ஆனால், இதில் ஆச்சரியப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், குழந்தைகள் இருவரும் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள். உருவ அமைப்பில் எந்த பெரிய மாற்றமும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றன. இது உண்மையில் சாத்தியாமா என எழுப்பட்ட கேள்வியில் மருத்துவர்கள் கூறியதாவது, அறிவியல் ரீதியாக இது heteroparental superfecundation என்று அழைக்கப்படுகிறது. ஒரே தாயிடமிருந்து இரண்டு முட்டைகள் வெவ்வேறு ஆண்களால் கருத்தரிக்கப்படும்போது இவ்வாறு நிகழ்கிறது. குழந்தைகள் தாயின் மரபணுவை பகிர்ந்துக் கொண்டாலும் அவை வெவ்வேறு நஞ்சுக்கொடிகளினாலேயே வளரும்" என்று தெரிவிக்கின்றனர்.
இம்மாதிரியான சம்பவம் மில்லியனில் ஒருவருக்கு தான் நடக்கும் என்றும் சுட்டிக்காட்டினர். அந்தவகையில், உலகில் இதுவரை 20 பேருக்கு இவ்வாறு நடந்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றன. மேலும், இச்சம்பவம் குறித்து பேசிய அப்பெண் 16 மாதங்களான தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் தந்தையரில் ஒருவர்தான் எந்த பாகுபாடும் இல்லாமல் பார்த்துக் கொள்வதாகவும், இரண்டு குழந்தைகளின் பிறப்பு சான்றிதழில் ஒரு தந்தையின் பெயரே இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…