பஞ்சாப் மாநிலத்தில், கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பல் போலீசார் கண்முன்னாடியே ஒரு பெண்ணை ஆயுதங்களை கொண்டு கொடூரமாக தாக்கிய சம்பவம் அறங்கேறியுள்ளது.
ஃபெரோஸ்பூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே நின்றுக்கொண்டிருந்த ஒரு பெண்ணை அடையாளம் தெரியாத 4 மர்ம நபர்கள் ஆயுதங்களால் கொடூரமாக தாக்கியுள்ளனர். பின்னர், அவர்களை பிடிக்க முயற்சிக்கும் பொழுது இருசக்கர வாகனங்களில் ஏறி தப்பியோடிவிட்டனர்.
மேலும், தாக்குதலில் பலத்த காயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவம் பட்டப்பகலில் அதுவும் போலீசார் கண்முன்னாடியே நடந்துள்ளது.
பின்னர், இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து விசாரணை மேற்கொண்டதில் தாக்கப்பட்ட பெண் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இதனிடையே தப்பியோடிய மர்ம நபர்களை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…