சென்னை மாணவர்கள் ஆண்டுதோறும் பஸ் டே கொண்டாட்டம் என்ற பெயரில் அட்டகாசம் செய்து வருவதும் அதனை காவல்துறையினர் தடுத்து வருவதும் வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இன்று பஸ்டே கொண்டாடப்படுவதாக அறிவித்தனர். இத்தகவலை அறிந்த காவல்துறையினர் பஸ்டே கொண்டாட கூடாது என தடை விதித்தனர்.
இதனையடுத்து, இன்று சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தடையை மீறி பஸ் டே கொண்டாடினர். இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உடனடியாக மாணவர்களை கலைத்து வேறு பேருந்துகளில் அனுப்பி வைத்தனர்.
மேலும், சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் பஸ்டே கொண்டாட்ட அட்டகாசம் காரணமாக பேருந்தில் செல்லும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…