பக்கெட் பிரியாணி வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம் என்ற அறிவிப்பில் மன்னார்குடியில் உள்ள தொப்பி வாப்பா என்ற பிரியாணி கடைமுன்பு மக்கள் குவிந்தனர்.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தக்காளியின் விலை சதம் கண்ட நிலையிலேயே உள்ளது. இந்த தக்காளி விலை ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்தில் காசுக்கு பதிலாக தற்போது தக்காளி வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விலையை சில தனியார் நிறுவனங்கள் சாதகமாக பயன்படுத்தி தங்களது பொருட்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன.
அந்தவகையில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் தொப்பி வாப்பா என்ற பிரபல பிரியாணி கடை ஒன்று உள்ளது. இந்தகடை இன்று அசத்தல் அறிவிப்பை ஒன்றை அறிவித்துள்ளது. பக்கெட் பிரியாணி வாங்கினால், தக்காளி இலவசம் என்ற அறிவிப்பை இந்த கடை வெளியிட்டது. அதாவது, ஐந்து முதல் ஏழு நபர்கள் சாப்பிடக்கூடிய பக்கெட் பிரியாணி வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படும். மூன்று நபர்கள் முதல் ஐந்து நபர்கள் சாப்பிடக்கூடிய பக்கெட் பிரியாணி வாங்கினால் அரைகிலோ தக்காளி இலவசம் என்று அறிவிக்கப்பட்டது.
தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்துவரும் நிலையில், இந்த அறிவிப்பு அசைவ பிரியர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இருந்தது. அறிவிப்பு வெளியான உடனே ஏராளமானோர் பிரியாணி வாங்க கடை முன்பு குவிந்தனர். பிரியாணி சாப்பிட்ட மாதிரியும் இருக்கும், வீட்டிற்கு தக்காளி வாங்கன மாதிரியும் இருக்கும் என மக்கள் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…