கனடாவில் நுழைய ரஷ்ய அதிபருக்கு தடை விதித்து அந்நாட்டு அரசு மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே ரஷ்யா மீது பலதடை விதித்துள்ள கனடா தற்போது, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் அவரது அரசாங்க மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த 1,000 உறுப்பினர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடைசெய்யும் மசோதாவை கனடா செனட்டில் அறிமுகப்படுத்தியது.
பிப்ரவரியில் உக்ரைனில் "சிறப்பு இராணுவ நடவடிக்கை" என்ற பெயரில் ரஷ்யா தாக்குதலை தொடங்கியதிலிருந்து, கனடா மற்ற மேற்கத்திய நட்பு நாடுகளுடன் சேர்ந்து ரஷ்யாவிற்கு எதிராக பல தடைகளை விதித்துள்ளது. அதே நேரத்தில் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்புகிறது. இந்த மாத தொடக்கத்தில் உக்ரைன் சென்ற பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மேலும் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை உக்ரைனுக்கு வழங்கப்படும் என உறுதியளித்தார்.
இது தொடர்பாக பேசிய கனடா நாட்டின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மார்கோ மென்டிசினோ ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அந்நாட்டு அரசு அதிகாரிகள் மற்றும் ராணுவத்தை சேர்ந்த 1000 பேர், எங்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்யும் மசோதாவை கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளோம். உக்ரைன் நாட்டு மக்களுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம் என்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…