74வது குடியரசு தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், டெல்லியில் கர்தவ்ய பாதையில் பிரமாண்டமான அணிவகுப்புகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கர்தவ்ய பாதையில் இந்திய முப்படைகளின் அணிவகுப்பு இந்தியாவின் ராணுவ வலிமையை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் இருந்தது. மேலும் இதில் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் அரசு துறைகளின் 23 அலங்கார ஊர்திகள் பங்கேற்றன.
கடந்த முறை தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், இந்த முறை தமிழக அரசின் அலங்கார ஊர்தியும் இடம் பெற்றிருந்தது, கர்நாடக சங்கீதம் மற்றும் கரகாட்ட இசையுடன், அணிவகுப்பில் பங்கேற்ற தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி அனைவரையும் கவர்ந்தது.
குறிப்பாக, தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி அணிவகுத்து சென்ற போது அங்கிருந்த பெண்கள் பலர் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…