தாம்பரம் அருகே தண்டவாளத்தை கடந்த போது, மாணவி ஒருவர் ரயிலில் அடிபட்டு பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த நிகிதா என்பவர், சென்னையில் தங்கி கல்லூரி ஒன்றில் நிகிதா பிஎஸ்சி சைக்காலஜி படித்து வந்தார். இவர், தாம்பரம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது, செல்போன் பேசிய படி கடந்துள்ளதா அந்த வழியாக ரயில் வந்ததை கவனிக்காமல் சென்றுள்ளார். இதனால், நிகிதா மீது ரயில் மோதியதில், அவர் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…