சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஊழியர்கள் வரும் 30 மற்றும் 31ம் தேதிகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளநிலையில் பல்வேறு வங்கி ஊழியர்கள், வங்கி அதிகாரிகள் சங்கங்களும் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளன.
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வரும் மே30-31 ஆகிய தேதிகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், பல்வேறு வங்கிகளும் ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் பங்குகொள்ளப்போவதாக அறிவித்துள்ளனர். வங்கிக் கிளைகளை மூடுதல், முக்கிய முடிவுகள் மூலம் ஊழியர்களைக் குறைத்தல், மிகப்பெரிய அளவில் ஊழியர்களை பணிமாற்றம் செய்தல், வெளிப்பணி ஒப்படைப்பு போன்ற பிரச்சினைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் நடக்கிறது.
கத்தோலிக் சிரியன் வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, தி பெடரல் வங்கி, யுசிஓ வங்கி ஆகிய வங்கிகளின் ஊழியர்கள் ஏற்கனவே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 30 -31 ஆகிய தேதிகளில் வங்கிகள் இயங்குமா இயங்காதா என்ற குழப்பம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…