கேரளாவில் சமீபகாலமாக திருமணமான இளம் பெண்கள் வரதட்சணை கொடுமையில் தற்கொலை செய்து வரும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. இது அம்மாநில அரசிற்கு பெரும் தொல்லையாகவே இருந்துவருகிறது.
இந்நிலையில் கொல்லத்தை சேர்ந்த 22 வயது விஸ்மயா வி நாயர் என்ற பெண் தனது கணவரான கிரண் குமார் வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். விஸ்வமயா ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை மாணவி ஆவார். இதனையடுத்து இவரின் சாவிற்கு வரதட்சணை கொடுமைதான் காரணமாக இருக்கும் என சந்தேகிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து அவரின் மரணம் சமூக வலைத்தளங்களிலும் ஊடககங்களிலும் விவாத பொருளாக மாறியது.
இதனையடுத்து விஸ்மயா வரதட்சணை கொடுமையால்தான் உயிரிழந்தார், எனக்கூறி அவரது கணவர் கிரண் குமார் கைதுசெய்யப்பட்டார். மேலும் விஸ்மயா இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஒரு உறவினருக்கு விஸ்மயா காயமடைந்த படங்களை அனுப்பியதாக தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், விஸ்மயா பெற்றோர் விஸ்மயா மரணத்திற்கு கிரண் குமார் குடும்பத்தினரும் காரணம் என குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் இந்த வழக்கில் கொல்லம் கூடுதல் நீதிமன்றம் விஸ்மயா கணவர் கிரண் குமார் குற்றவாளி என கூறி உள்ளது. தண்டனை விவம் பின்னர் அறிவிக்கப்டும் என கோர்ட் அறிவித்து உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…