Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Kerala Latest News : வெளியே செல்ல வேண்டாம்... ஆரஞ்சு அலர்ட்..?

Muthu Kumar May 19, 2022 & 12:59 [IST]
Kerala Latest News : வெளியே செல்ல வேண்டாம்... ஆரஞ்சு அலர்ட்..?Representative Image.

Kerala Latest News : திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களை தவிர மற்ற 12 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

கனமழை  

கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் சில மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளாவில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை மற்றும் மிக கனமழை மற்றும் அதன்பிறகு இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஆரஞ்சு அலர்ட்

கேரளாவில் திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களை தவிர மற்ற 12 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

முன்னெச்சரிக்கை

கேரள மாநிலத்தில் கனமழையைக் கருத்தில் கொண்டும், பருவமழை முன்கூட்டியே தொடங்குவதை கருத்தில் கொண்டும், நிலச்சரிவு மற்றும் வெள்ளம் போன்ற பிரச்சனைகளை சமாளிக்க அதிகாரிகள் தயாராக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

வெளியே செல்ல வேண்டாம்

கேரள மாநிலத்தில் மழை குறையும் வரை மக்கள் ஆறுகள் மற்றும் பிற நீர்நிலைகளிலுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், மலை பகுதிகளுக்கும், கடல் அலைகள் அதிகம் உள்ள கடலோரப் பகுதிகளுக்கும் மக்கள் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது. 

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட 5 நாட்களுக்கு முன்னதாக தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னதாகவே தெரிவித்துள்ளது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்