Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Saraswathi Updated:
அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் Representative Image.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வடமாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக நல்ல மழை பெய்துவருகிறது. கனமழையால், நேந்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேற்றிரவும், இன்றும் வாகனம் மேக மூட்டத்துடனும், இலேசான சாரல் மழையும் பெய்துவருகிறது. 

கனமழையால் திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 25ம் தேதி வரை தமிழகத்திற்கு மழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கூறியிருந்தது. இந்நிலையில்,  தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்த வகையில், அடுத்த 3 மணி நேரத்தில்,  காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, தஞ்சை, கரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் லேசான- மிதமான மழை பெய்யும் வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.  
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்