தமிழகத்தில் சென்னை,கோவை, நீலகிரி உட்பட 25 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இன்று முதல் ஜூலை 8 வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டியுள்ள வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளின் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் சென்னை,கோவை, நீலகிரி உள்ளிட்ட 25 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும் வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு,திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி, சேலம், திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் இலேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…