சென்னையில் வாட்ஸ் அப் மூலமாக போதை மாத்திரை விற்பனை செய்த இளம்பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் பல லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக போதை பொருள் பழக்கம் அதிகமாகிக்கொண்டு வருகிறது. சட்டவிரோதமாக நடக்கும் இந்த செயலை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் மற்ற இடங்களை விட அதிகமாகவே உள்ளது.
இந்நிலையில் சென்னை திருமங்கலம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த பகுதியில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த பகுதியில் இருந்த வணிக வளாகம் இருந்த இடத்தில வாலிபர் ஒருவர் அங்கும் இங்கும் சுத்தி வந்துள்ளார், இதனால் போலீசார் அவரை மடக்கி விசாரித்ததில் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை சோதனை செய்தனர், அப்போது அவரிடமிருந்து போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, அவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். போலீசார் விசாரணையில் அந்த இளைஞர் அயனாவரத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் ( வயது 28) என்று தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் ஸ்ரீகாந்தைப் போலவே சாகுல் ஹமீது ( வயது 21) மற்றும் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த இளம்பெண் டோக்கஸ் ( வயது 24) ஆகிய இருவருக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, சாகுல் ஹமீது மற்றும் டோக்கஸ் என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை செய்ததில் இவர்கள் போதை மாத்திரை விற்பனை செய்வதற்கென்று தனி வாட்சப் குழு ஒன்று வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களிடமிருந்து பல லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…