Tamilnadu News Live : சென்னை மாநிலக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் இரண்டு நாட்களுக்கு முன் ரயில் விபத்தில் உயிரிழந்தார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த ஒரத்தூர் என்ற பகுதியைச் சேர்ந்த நீதிதேவன் என்பவர் சென்னை மாநிலக் கல்லூரியில் பொருளியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நீதிதேவன் இரண்டு நாட்களுக்கு முன் ரயில் விபத்தில் உயிரிழந்தார்.
இந்நிலையில், நீதிதேவன் தனது நண்பர்களுடன் வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் செல்லும் புறநகர் ரயிலில் படியில் தொங்கியபடி சென்றுள்ளார். அப்போது, வேப்பம்பட்டு ரயில் நிலையத்திற்கும், செவ்வாப்பேட்டை ரயில் நிலையத்திற்கும் இடையே ரயில் சாகசம் செய்யதுள்ளார். அப்போது எதிர்பாரத விதமாக தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். மேலும், இதுகுறித்து ரயில்வேதுறை காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…