சென்னையில் கடந்த ஜூன் மாதத்தில் இயல்பை விட 190 சதவீதம் அளவுக்கு அதிகமான மழை பதிவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மே-ஜூன் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. ஜூன் முதல் வாரம் வரை வெப்பம் வாட்டியெடுத்த நிலையில், தமிழகத்தில் பள்ளி திறப்புகள்கூட தள்ளிப்போயின.இருப்பினும், இந்த காலகட்டத்தில் மாநிலத்தின் பல பகுதிகளில் பரவலாக நல்ல மழையும் பெய்தது. இதனால், வெப்பத்தின் தாக்கத்திலிருந்து மக்கள் ஓரளவு மீண்டெழுந்தனர்.
இதைத் தொடர்ந்து, கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் இன்று வரை (ஜூலை 1) தமிழகத்தில் 54 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது வழக்கத்தை விட (52.3 மி.மீ) 3 சதவிகிதம் அதிகம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இதே காலக்கட்டத்தில் சென்னையில் 193 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. இது வழக்கமான மழைப்பொழிவை விட (66.7 மி.மீ ) 190 சதவீதம் அதிகம் ஆகும். இதைத் தொடர்ந்து, காஞ்சிபுரத்தில்190 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதுவும் வழக்கமான மழைப்பதிவை விட (68.9 மி.மீ ) 176 சதவீதம் அதிகம் என சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…