Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Saraswathi Updated:
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்புRepresentative Image.

தமிழகத்தில் இன்று முதல் வரும் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளதாகவும், வரும் 3ம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் (ஜூன்29,30) தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் ஓரிரு இடங்களில் இடி  மின்னலுடன் இலேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதேபோல், ஜூலை 1மற்றும் 2ம் தேதிகளிலும் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஜூலை 3ம் தேதி தமிழகத்தின் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்றும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று குறிப்பிட்டுளள சென்னை வானிலை ஆய்வு மையம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் அறிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்