இந்தியாவில் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையேயான ரயில் சேவையை மேம்படுத்துவதற்காகவே 'வந்தே பாரத் திட்டம்' என்ற அதிவேக விரைவு ரயில் திட்டம் துவங்கப்பட்டது. தற்போது இதுவே மிகவும் பிரபலமான போக்குவரத்து முறையாகவும் மாறியுள்ளது. இந்தியாவில் உள்ள மற்ற ரயில்களை விட மிக வேகமாகவும், இலகுவாகவும் இருக்கிறது. இது பயண நேரத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கிறது. ரயிலில் தானியங்கி கதவுகள், குளிர்சாதன வசதி, வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் என பல அதிநவீன வசதிகள் உள்ளன.
அந்தவகையில் ஜூலை 7, 2023 முதல் இந்தியாவின் அடுத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை சென்னை முதல் திருப்பதி வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில் அதே பாதையில் செல்லும் மற்ற ரயில்களை விட கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே சென்னையில் இருந்து திருப்பதி சென்றடைந்துவிடும். இந்த பதிவில் சென்னை - திருப்பதி வந்தே பாரத் ரயிலின் வழித்தடம், நேர அட்டவணை, கட்டணம் குறித்த முழுவிபரங்களை பார்க்கலாம்.
வழி:
பொதுவாக சென்னை - திருப்பதி [151 கி.மீ தூரம்] செல்ல பயண நேரம் கிட்டத்தட்ட 3 மணி 25 நிமிடங்கள் ஆகும். ஆனால், வந்தே பாரத் வெறும் 1 மணி 15 நிமிடங்களில் சென்றுவிடுகிறது. தமிழகத்திலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி திருமலைக்கு சென்று வரும் நிலையில் வந்தே பாரத் சேவை துவங்கவுள்ளதை பக்தர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
கட்டணம்:
இந்த ரயிலுக்கான டிக்கெட் கட்டணம் பயண வகுப்பை பொறுத்து மாறுபடும். அதன்படி, சென்னை முதல் திருப்பதி வரை செல்ல சேர் காரில் ரூ.398 ஆகவும், எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் ரூ.798 ஆகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த ரயிலுக்கான ஒப்புதல் கிடைத்தவுடன் சென்னையிலிருந்து திருப்பதிக்கு ரயில் புறப்படும் நேரம் மற்றும் திருப்பதியில் இருந்து சென்னைக்கு ரயில் புறப்படும் நேரம், கட்டண விபரங்கள், பயண நேரம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…