சத்தீஸ்கர் சட்டமன்ற துணை சபாநாயகரும், ஆளும் காங்கிரஸ் எம்எல்ஏவுமான மனோஜ் சிங் மாண்டவி மாரடைப்பால் இன்று காலமானதாக கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.
58 வயதான மாண்டவி, மாரடைப்பு ஏற்பட்டு தம்தாரி நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் காலையில் இறந்தார் என்று மாநில காங்கிரஸ் தகவல் தொடர்பு பிரிவு தலைவர் சுஷில் ஆனந்த் சுக்லா கூறினார்.
கான்கேர் மாவட்டத்தில் உள்ள பானுபிரதாப்பூர் தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கும் மாண்டவி, நேற்று இரவு கான்கேர் மாவட்டத்தின் சாராமா பகுதியில் உள்ள தனது சொந்த கிராமமான நாதியா நவகானில் இருந்தார்.
அங்கு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சரமாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
எனினும் நிலைமை மோசமானதை அடுத்து மாண்டவி தம்தாரி நகரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
மூன்று முறை எம்.எல்.ஏ.வாகவும், பஸ்தார் பகுதியில் கட்சியின் முக்கிய பழங்குடி முகமாகவும் இருந்த மாண்டவி, 2000 மற்றும் 2003 க்கு இடையில் மாநிலத்தில் அஜித் ஜோகி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தின் போது உள்துறை மற்றும் சிறைத்துறை அமைச்சராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…