கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை காவேரி மருத்துவமனையில் கடந்த 14 ஆம் தேதியன்று அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்தார். அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
அதே நேரம் மருத்துவமனையில் இருந்துகொண்டே தனது அலுவல் பணிகளை தொடர்ந்து முதல்வர் செய்துவந்தார். இந்நிலையில் இன்று ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளநிலையில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள வாக்குப்பெட்டியில் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செலுத்தினார். அவரைத்தொடர்ந்து மாநில அமைச்சர்களும் வாக்களித்தனர். முன்னதாக ஜனாதிபதி தேர்தலில் நேரில் சென்று வாக்களிக்கிறேன் என்றும், இன்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட இருக்கிறது.
அந்த மகத்தான கொண்டாட்டத்தில் பங்கேற்கும் வகையில், வீட்டிலிருந்தபடியே காணொலியில் உரையாற்றிட இருக்கிறேன் என்றும், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் முழு உடல்நலத்துடன் பங்கேற்பேன் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…