அங்கன்வாடி மையத்தில் கூல்ட்ரிங்க்ஸ் பாட்டிலில் மண்ணெண்ணெய் வைத்திருந்த நிலையில், அதை குளிர்பானம் தவறாக நினைத்து குடித்த மூன்று குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த செல்வழிமங்கலத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இதில் சுமார் 13 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் அங்கன்வாடி மையத்தில் ஜம்போடை தெருவைச் சேர்ந்த வம்சிகா (2 வயது), யோகேஷ் (3 வயது), பிரியதர்ஷினி (2 வயது) ஆகிய மூன்று பேரும் அங்கன்வாடி மையத்தில் வைக்கப்பட்டிருந்த கூல்ட்ரிங்க்ஸ் பாட்டிலில் குளிர்பானம் இருப்பதாக நினைத்து மூன்று பேரும் பகிர்ந்து குதித்துள்ளனர்.
ஆனால் அதில் இருப்பது கூல்ட்ரிங்க்ஸ் அல்ல, மண்ணெண்ணெய் என்பது அந்த சிறு குழந்தைகளுக்கு தெரியவில்லை. இந்நிலையில், மூன்று குழந்தைகளுக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில், பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மூன்று குழந்தைகளும் உடனடியாக சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் மூன்று குழந்தைகளையும் மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குழந்தைகளை முறையாக பராமரிக்காத அங்கன்வாடி மைய ஊழியர் சோபா மற்றும் உதவியாளர் சாந்தி ஆகிய இருவரையும் ஸ்ரீபெரும்புதூர் குழந்தைகள் வளர்ச்சித் துறை அதிகாரி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
சிகிச்சை பெற்று வரும் 3 குழந்தைகளில் யோகேஷுக்கு மட்டும் தொண்டை பகுதியில் தீவிர பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…