Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

17 பேர் பலி.. இறுதிச் சடங்கில் சென்றவர்கள் மீது டிரக் மோதி கோர விபத்து!!

Sekar Updated:
 17 பேர் பலி.. இறுதிச் சடங்கில் சென்றவர்கள் மீது டிரக் மோதி கோர விபத்து!!Representative Image.

சீனாவின் நான்சாங் நகருக்கு வெளியே, இறுதிச் சடங்கிற்காக கூட்டமாக சென்று கொண்டிருந்தவர்கள் மீது, அவ்வழியாகச் சென்ற டிரக் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டது. இன்று அதிகாலை நடந்த இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர் மற்றும் 22 பேர் காயமடைந்தனர்.

சீன புத்தாண்டு விரைவில் வரவுள்ள நிலையில், அந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ள நிலையில், விபத்துகள் நடப்பது அதிகரித்துள்ளன. மேலும் விபத்துக்கான முழு காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக உள்ளூர் போக்குவரத்து நிர்வாக பிரிவு தெரிவித்துள்ளது.

உள்ளூர்வாசி ஒருவர் இது குறித்து கூறுகையில், தாவோலிங் கிராமத்தைச் சேர்ந்த துக்கம் அனுசரிப்பவர்களால் அமைக்கப்பட்ட ஒரு இறுதி ஊர்வலத்தில் அவ்வழியாகச் சென்ற டிரக் மோதியதில் விபத்து நிகழ்ந்ததாகக் கூறினார்.

விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலானோர் இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்கள் என தெரிகிறது. அங்கு மூடுபனி அதிகம் உள்ள நிலையில், வாகனங்களில் செல்வோர் கவனமாக செல்லுமாறு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்