சீனாவில் ஒரு பக்கம் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், மறு பக்கம் வெயில் சுட்டெரித்து வருவதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
வளர்ச்சி என்ற பாதையில் கண்மூடித்தனமாகச் சீனா செயல்படுவதாகவும், இதனால் சுற்றுச்சூழல் மாசு மட்டுமில்லாமல், பெரிய ஆபத்தே கூட ஏற்பட வாய்ப்புள்ளதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், சீனாவின் கான்ஸு , சீச்சுவான் மாகாணங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 40,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 12 பேர் பலியாகியுள்ளதாகவும், 12 பேரைக் காணவில்லை என்றும், மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மின்சாரம், தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இப்படி ஒரு பக்கம் சீனாவில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், செங்டு, ஷங்ஹாய் ஆகிய மாகாணங்களில் கடும் வெப்பம் சுட்டெரித்து வருகிறது. பல நகரங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளதாகவும், இதனால் நாடு முழுவதும், சுமார் 900 மில்லியன் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சீனாவின், தேசிய பருவநிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…