இளைஞர் ஒருவர் திருமணம் செய்த அடுத்த நாளே அவருக்கு 10 மில்லியன் டாலர் பரிசுத்தொகை கிடைத்துள்ளது.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 26 வயதான ரேஸ் என்ற இளைஞர் நங்கு ஆண்டுகளுக்கு முன்னர் துபாய்க்கு குடிபெயர்ந்தார், அங்கு உடற்பயிற்சி கூடத்தில் வேலை செய்து வந்த இவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்துள்ளனர். இதற்கு அடுத்த நாள் புகழ் பெற்ற துபாய் Mahzooz டிராவில் அவருக்கு 10 மில்லியன் டாலர் (கிட்டத்தப்பட்ட ரூ. 98 கோடி) பரிசு விழுந்துள்ளது. இது குறித்த வெற்றி பெற்ற ரீஸ் கூறுகையில் எனக்கு எனக்கு லாட்டரியில் இத்தனை கோடி பணம் விழுந்ததை என்னால் நம்பவே முடியவில்லை என்றும், இ-மெயிலில் அதை பார்த்ததும் உறைத்து போய் எனது மனைவியை கட்டிக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.
மேலும் நாங்கள் துபாயில் தான் வாசிக்கப்போகிறோம் எனவும் இங்கும் இங்கிலாந்திலும் இடம் வாங்கப்போவதாகவும் தனது மனைவிக்கு கார் ஒன்றை பரிசளிக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.துபாய் Mahzooz டிராவில் பரிசு வென்ற இளம் நபர் என்ற சாதனையையும் ரீஸ் பெற்றுள்ளார். இந்த சம்பவம் இணையத்தில் பரவிய நிலையில் பலரும் ரீஸ்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…