Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

கொடூரத்தின் உச்சம்; துடிக்க துடிக்க மாணவனை அடித்தே கொன்ற ஆசிரியர்!

KANIMOZHI Updated:
கொடூரத்தின் உச்சம்; துடிக்க துடிக்க மாணவனை அடித்தே கொன்ற ஆசிரியர்!Representative Image.

கர்நாடகாவில் 4ம் வகுப்பு மாணவனை ஆசிரியர் அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகாவின் வடக்கு பகுதியில் உள்ள ஹாக்ளி என்ற கிராமத்தில் ஆதர்ஷ் என்ற அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பாரத் என்ற 10 வயது சிறுவன் 4ம் வகுப்பு படித்து வருகிறார். இங்கு ஒப்பந்த அடிப்படையில் முத்தப்பா என்ற ஆசிரியர், மாணவரான பரத்தை அடித்து உதைத்துள்ளார். 

கம்பியால் சிறுவனை கொடூரமாக தாக்கியவர் அவர், பள்ளியின் முதல் மாடியில் இருந்து சிறுவனை கீழே தள்ளியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த பரத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாணவனின் தாயாரும் அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் நிலையில், அவரையும் முத்தப்பா தாக்கியுள்ளார். படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குடும்ப பிரச்னை காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறியுள்ள காவல்துறை முத்தப்பாவை தேடி வருகிறது
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்