ஆந்திராவில் சக ஊழியருடன் தலைமையாசிரியர் ஒருவர் வகுப்பறையிலேயே தனிமையில் இருந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மசூலிப்பட்டிணம் அருகே அரசு உருது சிறுபான்மையினர் உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு ஆனந்த் பாபு என்பவர் தலைமை ஆசிரியராக உள்ளார். இவரும், அதே பள்ளியில் கணினி ஆப்ரேட்டராக பணியாற்றி வரும் பெண் ஊழியர் ஒருவரும் அடிக்கடி விடுதி அறையில் தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனை பார்த்த மாணவர்கள் சிலர், தலைமையாசிரியரும், கணினி ஆப்ரேட்டரும் தனிமையில் இருக்கும் போது அதனை செல்போனில் வீடியோவாக எடுத்து, சக மாணவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் பரப்பியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சோசியல் மீஇட்யாவில் வைரலானதை அடுத்து போலீசார் ஆனந்த் பாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…