கோயம்பத்தூர் சிவானந்தா காலனி பகுதியை சேர்ந்தவர் 32 வயதான நான்சி. இவர் பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள குப்புசாமி நாயுடு என்ற தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய கணவர் வினோத் மெடிக்கல் ரெப்பாக பணிபுரிந்து வந்துள்ளார். இதற்கிடையில், நான்சியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அடிக்கடி அவருடைய கணவர் வினோத் சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் இருவருக்கிம் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 3 ஆம் தேதி மாலை நான்சி பணிபுரியும் மருத்துவமனைக்கு சென்ற வினோத் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் பேச்சி முற்றி கோபமடைந்த வினோத் மனைவி நான்சியின் உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தியுள்ளார். இதனால், பலத்த காயமடைந்த நான்சியை அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையில், மனைவியை குத்திவிட்டு தப்ப முயன்ற வினோத்தை ஊழியர்கள் பிடித்துள்ளனர். பின்னர், வினோத் உடலிலும் காயங்கள் இருந்ததால் சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையில், மனைவியை கொலை செய்துவிட்டு மருத்துவமனையில் இருந்து கத்தியுடன் வினோத் வெளியேறும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
அதில் டிப் டாப் உடையணிந்தபடி கொலை சம்பவத்தை நிகழ்த்திவிட்டு கையில் கத்தியுடன் வெளியேறுவதும், அவரை மருத்துவமனை ஊழியர்கள் பின் தொடர்ந்து செல்வதும், அதற்கு வினோத் 'நான் காவல் நிலையத்திற்கு தான் போகிறேன்' என்று சொல்வதும் பதிவாகியுள்ளது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…