Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முறை மாமனுடன் மொபைல் போனில் பேசியவாறே, ஓடும் ரயில் முன் பாய்ந்து கல்லுாரி மாணவி தற்கொலை.. 

Nandhinipriya Ganeshan November 09, 2022 & 13:57 [IST]
முறை மாமனுடன் மொபைல் போனில் பேசியவாறே, ஓடும் ரயில் முன் பாய்ந்து கல்லுாரி மாணவி தற்கொலை.. Representative Image.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த வல்லம்படுக்கை கிராமத்தை சேர்ந்தவர் கணேசமூர்த்தி. இவரது மகள் கிருத்திகா. 19 வயதான இவர் கடலூரிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாமாண்டு படித்து வந்தார். எப்போதும் கல்லூரி முடித்துவிட்டு மாலை நேரத்தில் கம்ப்யூட்டர் வகுப்புக்கு செல்வது வழக்கம். அதன்படி, எப்பவும் போல  கல்லூரி முடித்துவிட்டு நேற்று முன்தினம் மாலை கம்ப்யூட்டர் வகுப்புக்கு சென்றுள்ளார். வகுப்பு முடிந்து வீட்டிற்கு செல்லாமல், அவரது வீட்டின் பின்புறத்தில் இருக்கும் இரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற திருச்செந்தூர் விரைவு ரயில் முன், கண் இமைக்கும் நேரத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

இதில், கிருத்திகா உடல் சிதறி கல்லூரி மாணவி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து இது குறித்து மயிலாடுதுறை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கிருத்திகா தனது மாமன் மகனை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார். தன்னை சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளுமாறு அவரிடம் வற்புறுத்தியும் வந்துள்ளார். அவருடைய அம்மாவுக்கு உடல்நிலை சரியிலாததால், சில நாட்களுக்கு பிறகு செய்து கொள்ளலாம் என காதலன் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், கிருத்திகாவின் பெற்றோரும் படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர். இதனால் விரக்தியில் இருந்த கிருத்திகா சம்பவம் நடந்த அன்று தனது காதலனை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, 'நான் ரயிலில் விழுந்து சாகப்போகிறேன்'  என்று சொல்லியபடியே ரயில் முன் பாய்ந்துள்ளார்.

இரவு நேரமாகி விட்டதால் கிருத்திகா தற்கொலை செய்து கொண்டது யாருக்கும் தெரியவில்லை. காதலன், கிருத்திகாவின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்த பின்னரே தற்கொலை செய்து கொண்ட விவரம் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. படிப்பு முடிந்து திருமணம் செய்து வைக்க கூறியதால் இரயிலில் விழுந்து மாணவி தற்கொலை செய்துக்கொண்ட அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்