கன்னியாகுமரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி திடீரென உயிரிழந்ததால் ஒரே பரபரப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே வாவறை பகுதியை சேர்ந்த சின்னப்பர் மற்றும் தங்கபாய் என்னும் தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில் மேடுஹல் இரண்டு மகள்களுக்கு நல்ல படியாக திருமணம் நடைபெற்றதுள்ளது. எனவே, மூன்றாம் மகள் களியக்காவிளை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாவது ஆண்டு படித்து வந்தார். இவர் ஸ்கூல் படிக்கும் போதிருந்தே நித்திரவிளை பகுதியை சேர்ந்த வருண் என்பவரை காதிலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அவர் மாணவியிடம் ஆசை வார்த்தை பேசி காதலிக்க வைத்து பல இடங்களுக்கு ஒன்றாக ஊர் சுற்றியதாக கூறப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு இவர்களின் காதலை வருண் தன்னுடைய பெற்றோர்களிடம் சொல்லி திருமணத்திற்கு சம்மதம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் வீட்டில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மாணவி மிகுந்த மாணவருத்தத்தில் இருந்தாளர். அதனால் தன்னுடைய வீட்டில் இருந்தவர்கள் யாரிடமும் பேசாமல் சோகமாக மாணவி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதி காலை திடீரென மாணவிக்கு வயிற்றுவலி ஏற்பட்டுள்ளதால், அவரது பெற்றோர் மாணவியை அழைத்து கொண்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 3 நாட்கள் சிகிச்சை பெற்றும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், 4 ம் தேதி கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாணவி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து மாணவியின் தாயார் தங்கபாய், நித்திரவிளை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் காதலன் திருமணம் செய்வதாக கூறி ஏமற்றியதால், மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…